உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

தீவிரவாதியின் உடலை பொது மயானத்தில் புதைக்க எதிர்ப்பு

சியோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுதாக்குதல் நடத்திய நபரின் உடலைப் பொது மயானத்தில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தீவிரவாதியின் உடற் பாகங்களை மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட பாரதி வீதியில் அமைந்துள்ள மயானத்தில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பிரதேச மக்கள், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது வீதியில் டயர் இட்டு எரித்தும், வீதியை மறித்தும் எதிர்ப்பை வெளியிடப்பட்டது.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு திருப்பலி இடம்பெற்ற வேளையில் தற்கொலைக் குண்டுதாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் பொதுமக்கள் பலர் பரிதாபகரமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க