உள்நாட்டு செய்திகள்புதியவை

ஹெரோயின்போதை பொருட்களுடன் சீதுவையில் இருவர் கைது

போதை பொருட்களுடன் சீதுவை பிரதேசத்தில் இருந்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சுமார் ஒன்றரை கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 12 கிலோகிராம் கஞ்சா, 500 போதை இலைகள், துப்பாக்கி, மற்றும் 7 ரவைகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பணமும் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளது.

போதை பொருட்களுடன் சீதுவை ரப்பர்வத்த சந்தி பகுதியில் 521 கிராம் ஹெரோயினுடன் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே ரத்தொழுகம வீடொன்றை பரிசோதனை செய்த பொழுது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க