உள்நாட்டு செய்திகள்புதியவை

கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு – மேலும் ஒருவர் படுகாயம்

காரைதீவு பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் காரைதீவு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வடிவேல் வீதி காரைதீவு 12இல் வசித்த ஒரு பெண் பிள்ளையின் தந்தையான 27 வயதையுடைய ஞானசேகரம் ரதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாகவே குறித்த கத்திகுத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க