உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்த பெயர்பலகைகள் அகற்றல்!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பெயர்பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

இதன்படி, குருகந்த ரஜமகாவிகாரையின் பெயர் பலகையும், நீராவியடிப்பிள்ளையார் ஆலய ஒரு பெயர்பலகையும் அகற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு பொலிஸார், நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் முன்னிலையில் வீதியில் இருந்து 15 மீற்றர் தூரத்தில் இருந்த இரண்டு பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அமைக்கப்பட்ட இரண்டு பெயர்பலகைகளில் ஒரு பெயர்பலகைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அனுமதி பெற்ற குறித்த பெயர்பலகை அகற்றப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க