உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தமது நடவடிக்கையே தற்கொலைதாரி மிஹ்லானை கைதுசெய்ய உதவியது- சர்வதேச காவல்துறை

சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் சிவப்பு அறிக்கையை அடுத்தே இலங்கையின் தற்கொலைதாரி சவூதியில் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், நேற்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தற்கொலைத்தாரி சந்தேகநபரான அஹமட் மிஹ்லான் சவூதியில் வைத்து கைதுசெய்யப்படுவதற்கு தமது சிவப்பு எச்சரிக்கையே காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டமையானது. நுடைபெற்று வரும் விசாரணைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று இன்டர்போலின் செயலாளர் ஜெர்ஜென் ஸ்டொக் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் சர்வதேச காவல்துறையின் குழுவே முதலில் இலங்கைக்கு வந்த சர்வதேச குழுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க