உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

200 புகையிலை தூள் டின்களுடன் அட்டனில் ஒருவா் கைது

அட்டன் நகர பகுதியில் புகையிலை தூள் அடைக்கப்பட்ட 200 டின்களுடன் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து அட்டன் பகுதியில் என்.சி போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக பெற்றோர்கள் கடந்த காலங்களில் குற்றம் சுமத்தி வந்தனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அட்டன் பொலிஸார் இந்த சுற்றி வளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி சந்தேக நபர் விற்பனை செய்வதற்காக புகையிலை தூள் அடைக்கப்பட்ட 200 டின்களை வைத்திருந்த நிலையில் அட்டன் பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபா் கைது செய்யப் பட்டுள்ளார்.

கைது செய்யபட்ட நபரை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க