வெளிநாட்டு செய்திகள்

ஆதாரங்கள் இன்றி அமெரிக்கா குற்றம் சுமத்துகிறது-ஈரான்

ஓமான் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரானே பொறுப்பேற்க வேண்டும் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஓமான் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் இரண்டின் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களை ஈரான் மேற்கொண்டிருப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி இருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு அடிப்படை ஆதாரங்கள் இன்றி அமெரிக்கா, தங்கள் மீது குற்றம் சாட்டுவதாக கூறியுள்ளது.

கருத்து தெரிவிக்க