உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தீவிரவாதத்தின் கோர முகத்தை இலங்கையில் பார்த்தேன்- பிரதமர் நரேந்திர மோடி

இலங்கையில் குண்டுவெடிப்பு நடைபெற்ற தேவாலயத்தை பார்வையிட்ட போது தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு நேற்று ஆரம்பமானது.

இதன்போது உரையாறறிய மோடி இலங்கையில் குண்டுவெடிப்பு நடைபெற்ற தேவாலயத்தை பார்வையிட்ட போது தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன்.

அத்துடன் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள இணைந்து செயல்பட மனிதாபிமான சக்திகள் முன்வர வேண்டும்.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு நிதி ஊக்கம் அளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும். இந்த போரில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்

கருத்து தெரிவிக்க