உள்நாட்டு செய்திகள்புதியவை

நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது

நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் வகையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மீண்டும் எதிர்வரும் 18 ஆம் திகதி ஒன்று கூடவுள்ளதாக நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று வியாழக்கிழமை இந்த தெரிவுக் குழு முன்னிலையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜெ.ஜே. ரத்னசிறி ஆகியோர் சாட்சியமளித்தனர்.

கருத்து தெரிவிக்க