உள்நாட்டு செய்திகள்புதியவை

கலந்துரையாடல்கள் – நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் ஜனாதிபதி உரை!

தஜிகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ள ஆசிய கலந்துரையாடல்கள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் மாநாட்டில் நாளைய தினம் சனிக்கிழமை ஜனாதிபதி விஷேட உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி பல்வேறு நாடுகளின் அரசத் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என அரசத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மாநாட்டில் நாட்டின் பொதுவான விடயங்கள், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க