உள்நாட்டு செய்திகள்புதியவை

அசாத் சாலிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் அசாத் சாலிக்கு எதிராக, உண்மையின் பாதுகாவலர் என்ற அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி ப்ரேம்நாத் சி தொலவத்த முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க