உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மாத்தறை- தெனியாய பெவர்லியில் முச்சக்கரவண்டி எரியூட்டப்பட்டது.

மாத்தறை, தெனியாய பெவர்லி மேல் பிரிவின் வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று விடியற்காலை 02.00 மணியளவில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதன் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த 2 வாகனங்களும் அதே இடத்தில் உள்ள உறவினர்களின்; வீடுகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து தெனியாய காவல்துறை நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க