விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட் தொடர்- தன் கணிப்பை வெளியிட்ட சுந்தர் பிச்சை

உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இறுதி போட்டியில் விளையாடும் அணிகள் எவை என்பதை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.

அமெரிக்க வொஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுந்தர் பிச்சையிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்ட போதே அவர் தனது கணிப்பை வெளியிட்டார்.

இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோதும் என தான் நினைப்பதாகவும் இதேவேளை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் சிறந்து விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க