உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த வேண்டாம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எச்சரிக்கை

இனங்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்துகின்ற பேச்சுக்களை வெளியிட வேண்டாம் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் எச்சரிக்கையையுடனான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
இதேவேளை அரசாங்கத்தில் பதவிகளை வகித்த முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் கடந்த 03ஆம் திகதி பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துகொண்டனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, முஸ்லிம் உறுப்பினர்களின் இந்த செயற்பாடானது மிகவும் பிழையான முன்னுதாரணத்தை காண்பிப்பதாக கண்டித்தார்.

கருத்து தெரிவிக்க