உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வலி வடக்கு பிரதேசத்திற்கு ஆளுநர் சுரேன் ராகவன் விஜயம்

வலி வடக்கில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் கலந்துரையாட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அப்பகுதிக்கு சென்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் இன்று முற்பகல் அவர் வலி வடக்கு பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் கடற்படையினர் வசமுள்ள நகுலேஸ்வரம் புனித பூமிக்கு சொந்தமான 42 ஏக்கர் காணி உட்பட பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆராயப்பட்டது.

அத்துடன் பலாலி வடக்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி ஆகியவற்றிற்கும் ஆளுநர் விஜயத்தினை மேற்கொண்டு பாடசாலைகளின் தற்போதைய நிலவரங்கள் குறித்து பாடசாலை அதிபர்களிடம் கேட்டறிந்துகொண்டதுடன் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின்போது வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரு சுகிர்தன் மற்றும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளீதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க