உள்நாட்டு செய்திகள்புதியவை

எச்சரிக்கையுடன் இலங்கைக்கான பயணத் தடையை தளர்த்தியது அவுஸ்ரேலியா

இலங்கைக்கு வரும் அவுஸ்ரேலியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் அவுஸ்ரேலியா தளர்த்தியுள்ளது.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து அவுஸ்ரேலியா இலங்கைக்கான பயணத் தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சாதாரண நிலையை அடுத்து, பயணத் தடையை தளர்த்துவதாக அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்ரேலியர்கள் கவனமாகவும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க