வடக்கு செய்திகள்

முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு புதிய நிர்வாகக் குழு தெரிவு

முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் புதிய குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் தலைமையில் ஆரம்பமாகிய இந்த கூட்டத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது  புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. இதில் தலைவராக ந.சிதம்பரப்பிள்ளை செயலாளர் ப.செந்தூரன் பொருளாளர் பா.மயூரன் மற்றும் போசகர் உள்ளிட்ட 7 நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது அதிகம் பாதிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவுள்ளன.

இதற்கு கிராம அபிவிருத்தி சங்கங்கங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க