உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

முல்லைத்தீவு பொக்கணையில் தமிழன் குண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பொக்கணைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இரண்டு தமிழன் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பொக்கணைப்பகுதிகுதியில் நேற்று முன்தினம் காணியினை துப்பரவு செய்துகொண்டிருக்கும் போது நிலத்தில் புதையுண்ட நிலையில் இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து ,  நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக குறித்த இடத்தில் உள்ள குண்டுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க