உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

போக்குவரத்துவிதிகளை மீறியவர்களிடமிருந்து இலட்சக்கணக்கான தொகை அறவீடு

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த ஐந்து மாதங்களில் வீதி போக்குவரத்து சட்டங்களை மீறிய 8850பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து  89 இலட்சத்து 97ஆயிரம் ரூபாவை அபராதமாக  அறவிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது .

கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

அதிக வேகம் ,தலைக்கவசம் அணியாமை, வீதி ஒழுங்கை கடைப்பிடிக்காமை, சாரதி அனுமதிப்பத்திரம், வாகன அனுமதிப்பத்திரம், வாகன காப்புறுதி இல்லாமை உட்பட பல்வேறு காரணங்களினால் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க