உள்நாட்டு செய்திகள்புதியவை

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக ருவன் குலதுங்க நியமனம்!

இலங்கை தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1ஆம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க