உள்நாட்டு செய்திகள்புதியவை

இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் அளிக்கப்படும் பயிற்சி பயனுள்ளது: மகேஸ் சேனநாயக்க

இலங்கை இராணுவத்தின் இளம் அதிகாரிகளுக்கு இந்தியாவில் அளிக்கப்படும் பயிற்சி பயனுள்ளதாக இருப்பதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்திய-இலங்கை இராணுவ அதிகாரிகளின் உயர்மட்டப் பேச்சுக்கள் நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

மூத்த அதிகாரிகளுக்கான புலனாய்வு, சிறிய ஆயுதங்களைக்கொண்ட பொறிமுறைகள் போன்ற பயிற்சிநெறிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குமாறு இந்திய அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்து தெரிவிக்க