வணிக செய்திகள்

சர்வதேச கடல்வழிப்பயண வரைப்படத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம்

அம்பாந்தோட்டை துறைமுகமானது பரந்த அளவிலான சேவைகளை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதன் மூலம் எதிர்வரும் மாதங்களில் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகமானது, ஜெர்மனியில் கடந்த வரம் இடம்பெற்ற உலகின் பிரதான போக்குவரத்து கண்காட்சியில் முக்கிய பங்கு வகித்திருந்தது.

குறித்த கண்காட்சியில் அம்பாந்தோட்டை துறைமுகம் உலகின் கடல் சார் வரைப்படத்தில் புதிதாக இடம் பிடித்திருப்பதும் அதற்கான விளக்கங்களும் முக்கிய அம்சமாகவிருந்தது.

இதில் 2374 கண்காட்சியாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 64 000 பார்வையாளர்கள்  கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகப் பிரிவின் பிரதிநிதிகளின் ஜேர்மனியின் முன்னணி பொறியியல் நிபுணர்களுடன் பல உயர் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க