உள்நாட்டு செய்திகள்புதியவை

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் இன்று முன்னிலையாக மாட்டார்

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் இன்று வியாழக்கிழமை முன்னிலையாக மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு இன்றைய தினமும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்திருந்தது. இந்த நிலையில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

அத்துடன், பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் சட்டம், ஒழுங்குகள் அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரும் வாக்குமூலம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க