உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஹிஸ்புல்லாஹ் முன்னிலை!

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

குறித்த குழுவால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு எதிர்ப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கூடுகிறது.

இன்றைய அமர்வில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

அத்துடன், முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன், பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் சட்டம், ஒழுங்குகள் அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரும் வாக்குமூலம் வழங்கவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க