விளையாட்டு செய்திகள்

வில்லியர்ஸ் இல்லாத அணியால் பாதகம் – ப்ளெஸ்ஸிஸ்

ஏ.பி.டி வில்லியர்ஸ் இல்லாத உலகக் கிண்ணத்தொடரில் பாதகம் உள்ளதாக தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஃபஃப் டூ ப்ளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்காவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் அறிவித்திருந்தார்.

பின்னர் உலகக் கிண்ண போட்டிகளில் விளையாட விரும்புவதாக கூறிய போதும், தென்னாபிரிக்க தேர்வுக் குழு அதனை நிராகரித்து இருந்தது.

இந்த நிலையில், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக் கிண்ண போட்டிகளில் தென்னாபிரிக்க அணி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த போதே அணியின் தலைவர் ப்ளெஸ்ஸிஸ் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

ஏ.பி.டி வில்லியர்ஸ் உலகக் கிண்ண போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்த போது அணியினுடைய அனைத்து தேர்வு நடவடிக்கைகளும் பூர்த்தியாகி இருந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

எது எப்படியோ, ஏ.பி.டி வில்லியர்ஸ் இல்லாதது அணிக்கு சாதகமானதாகவும் பாதகமானதாகவும் தான் இருந்துள்ளது எனவும் ஃபஃப் டூ ப்ளெஸ்ஸிஸ் கூறினார்.

கருத்து தெரிவிக்க