புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் – தமிழகத்தில் தீவிர தேடுதல்

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குழுவொன்றை கைது செய்வதற்கான நடவடிக்கையை இந்திய பாதுகாப்புத் தரப்பு முன்னெடுத்துள்ளது.

இதன்படி, தமிழகத்தின் கோயம்புத்தூர் பகுதியில் இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்பாக தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்திலும் கடந்த நாட்களில் மேற்கொளளப்பட்ட சோதனைகளில் சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க