இந்தியா

அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 5. 1 ஆக பதிவு

அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் மிசோராம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நேற்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின.

வடகிழக்கு மாநிலங்களில் இருள் சூழ்ந்திருந்த நிலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் குவிந்தனர். மாலை 4.16 முதல் அடுத்தடுத்து நில அதிர்வுகள் உணரப்பட்டன.

இது ரிக்டரில் 5.1 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் இருந்து 25 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க