வடக்கு செய்திகள்

மன்னாரில் 322 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாதிரி கிராம வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை மன்னாரில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில்,மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட மன்னார் தொடக்கம் தலை மன்னார் வரையில் உள்ள சுமார் 12 மாதிரி கிராம வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இதன் படி, மொத்தம் 322 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் செல்வராஜ் குலாஸ் தலைமயில் இடம் பெற்ற நிகழ்வுகளில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.முஜாகீர் மற்றும் உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

கருத்து தெரிவிக்க