உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிசாட் பதியூதீன் ஆகியோர் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவிலேயே ஹிஸ்புல்லாவிற்கு எதிரான முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.

பேஸ்புக்கில் ஹிஸ்புல்லாவின் உரை காணொலியொன்று காணப்படுகிறது. அதில் ‘மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த ஓர் வழக்கு தொடர்பாக தான் நீதிபதியை மாற்றி தனக்கு சாதகமாக நீதிபதியைக் கொண்டு வந்து எழுதடா தீர்ப்பு என்று எழுத வைத்ததாக’ அவ்வுரையில் குறிப்பிடுகிறார்.

இது இலங்கையின் நீதித்துறையையும் அதன் சுதந்திரத்தையும் அதன் கௌரவத்தையும் கேள்விக்குறியாக்கும் ஒரு விடயம்.

இதனால் இது தொடர்பாக உடனடியாக விசாரித்து தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றும் ஹிஸ்புல்லா தனது அரசியல் பதவிகளை பயன்படுத்தி நீதித்துறை மீது இதேபோல் வேறு அழுத்தங்களை பிரயோகித்திருக்கின்றாரா என்பதை ஆராயும் படியும் முறைப்பாட்டில் தவராசா குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க