உள்நாட்டு செய்திகள்புதியவை

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பிரதமர் கடும் கண்டனம்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் சர்ச்சைக்குரிய உரைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

பள்ளிவாசலொன்றில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஹிஸ்புல்லா,

” முஸ்லிம் மக்கள் இலங்கையில் சிறுபான்மையினராக வாழ்ந்தாலும் உலகில் அவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். எனவே, எங்களை எவரும் அச்சுறுத்தி அடிபணிய வைக்கமுடியாது.” என்ற தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது மேற்படி உரை குறித்து கேள்விகள் எழுப்பட்டன. இதன்போதே பிரதமர் தமது கண்டனத்தை பதிவு செய்தார்.

கருத்து தெரிவிக்க