உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் இலங்கை வரவுள்ளார்

ஜப்பானிய பிரதமரின் விசேட ஆலோசகர் டொக்டர் ஹிரோட்டோ இஸுமி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 20 -22 இடையே இந்த சந்திப்பு இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இலங்கைக்கான பயணம் குறித்து ஜப்பான் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த அறிவித்தலை இலங்கையின் ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ளது.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சு கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி இலங்கைக்கான அத்தியாவசியமான பயணங்கள் தவிர்த்து ஏனைய பயணங்கள் தவிர்க்க பட வேண்டும் என அந்நாட்டு மக்களுக்கு உத்தரவிட்டது.

இலங்கையில் நிலைமை சீராகியுள்ள நிலையில் இந்த உத்தரவு தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க