75ஆண்டுகளுக்கு மேலாக வீதி அபிவிருத்தி திணைக்கள பதிவேடுகளில் கல்வியங்காடு-செம்மணிக்குளம் வீதி என பதியப்பட்டிருந்த வீதி, தற்போது புதிய செம்மணி வீதி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் கோரிக்கைக்கு அமைய இப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக வீதி அபிவிருத்தி திணைக்கள பதிவேடுகளில் செம்மணிக்குளம் வீதி என்று காணப்பட்ட போதிலும் அப்பகுதி மக்கள் புதிய செம்மணி வீதி என்றே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையிலேயே பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெயர் மாற்றத்தை தொடர்ந்து நல்லூர் பிரதேச சபையினால் புதிய செம்மணி வீதி என்ற பெயர் பலகை நாட்டப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க