உள்நாட்டு செய்திகள்புதியவை

கைது செய்யப்படுவோரை விடுவிப்பதாக கூறி மோசடி

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிப்பதாக கூறி சில குழுக்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்துள்ளார்.

குறித்த குழுக்கள், பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்களை பிணையில் மீட்பதாக கூறி குடும்பத்தினரிடமிருந்து பெருந்தொகை பணத்தை கோரி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பொது மக்களிடம் தொலைபேசி வாயிலாக பணம் கோரி அச்சுறுத்தும் குறித்த குழுவை சேர்ந்தவர்களை பயங்கரவாத குற்றத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க