உள்நாட்டு செய்திகள்புதியவை

ஈஸ்டர் தாக்குதல்கள் – அசாத் சாலியிடம் இன்று வாக்குமூலம்!

நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழுவில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று செவ்வாய்க்கிழமை முன்னிலையாகவுள்ளார்.

கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற விஷேட தெரிவுக் குழு நியமிக்கப்பட்டது.

குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு வெளியான தகவல்கள் குறித்து இதன்போது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இதன்படி, பிற்பகல் 2 மணிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு கூடுகிறது.

இதில், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி மௌலவி மற்றும் காத்தன்குடி முஸ்லிம் பள்ளிவாசல் சங்கத்தின் தலைவர் ஆகியோரும் வாக்குமூலம் வழங்கவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க