உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தலவாக்கலை-மடக்கும்புர தோட்டத்தில் மண்சரிவு அபாயம்

நுவரெலிய- தலவாக்கலை, மடக்கும்புர பிரதேசத்தில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்பட்;டு வருவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் பல நாட்களாகவே தொடர்ச்சியாக மண் கீழிறங்கி வருகிறது.

எனினும் பெருந்தோட்ட நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வருவதால் போக்குவரத்து தடை ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.

எனவே உரிய முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க