வடக்கு செய்திகள்

திருமுருகண்டியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு- மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமுருகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வியாபார நிலையத்தில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் இந்துபுரம் திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய ஆறுமுகம் குமாரராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த நபர் உயிருடன் இருந்துள்ளதாக அருகிலுள்ள வியாபாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பகுதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுட்டள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க