உள்நாட்டு செய்திகள்புதியவை

தேர்தல்களை நடத்துவது குறித்து விஷேட கலந்துரையாடல்!

தேர்தல்களை நடத்துவது குறித்து விஷேட கலந்துரையாடல் ஒன்றை நாளை செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் இதில், ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்டசிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க