கிழக்கு செய்திகள்

வேன் மோதியதில் வயோதிபப்பெண் உயிரிழப்பு 

மட்டக்களப்பு—கல்முனை நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 68வயதுடைய ஏழு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடாவில் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 5.30மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி மிக வேகமாக வந்த வெள்ளை நிற வேன் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த குறித்த பெண்ணை மோதிவிட்டு மிக வேகமாக தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் சிங்கராசா பரமேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

தப்பியோடிய வேனை பொலிசார் தேடி வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க