உள்நாட்டு செய்திகள்புதியவை

2 மாதங்களின் பின்னர் முஸ்லிம் பாடசாலைகளின் 2 ஆம் தவணை இன்று ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து 2 ஆம் தவணைக்காக முஸ்லிம் பாடசாலைகள் இன்று (10) ஆரம்பமாகின.

தாக்குதலினால் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை மற்றும் புனித ரமழான் நோன்பு விடுமுறைக்காக தொடர்ந்து மூடப்பட்டிருந்த முஸ்லிம் பாடசாலைகள் சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமாகின.

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் இன்று 70 வீதமான மாணவர்கள் சமூகமளித்ததாக பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அமைதியான முறையில் முஸ்லிம் பாடசாலைகள் இடம் பெற்றுவருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க