உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

உலகத் தமிழர் பண்பாட்டு மையத்தின் மாணவர்களுக்கான நிகழ்வு

யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 57 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

உலகத் தமிழர் பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந் நிகழ்வு இடம்பெற்றது.

 

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு இந்த உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலர், உலகத் தமிழக பண்பாட்டுமையத்தின் தலைவர்  உள்ளிட்ட உறுப்பினர்கள், வலிவடக்கு பிரதேச சபை தவிசாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க