உள்நாட்டு செய்திகள்புதியவை

சமூக வலைத்தளங்களில் கட்டுப்பாடுகள் குறித்த புதிய நடைமுறை!

சமூக வலைத்தளங்களில் கட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளல் குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு அவதானம் செலுத்தி வருகின்றது.

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவுக்கும் இடையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கருத்து, காணொளிகளை பதிவிடுதல் மற்றும் சமூக வலைத்தளம் ஊடாக வெறுப்புணர்வை பரப்புதல் முதலான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க