உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தாக்குதலுக்குள்ளான கொச்சிக்கடை தேவாலயத்திற்கும் செல்கிறார் பிரதமர் மோடி

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தற்கொலை குண்டுதாக்குதல் நடத்தப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திய மோடி, இன்று கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருக்கின்றது.

இதனைமுன்னிட்டு கொச்சிக்கடை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து நடைமுறையும் அமுலில் இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மூன்று மணிநேரம் குறும்பயணம் மேற்கொண்டு இன்று முற்பகல் 11 மணிக்கு கொழும்பு வரவுள்ள மோடிக்கு, விமான நிலையத்தில் பிரமாண்டமாக வரவேற்பளிக்கப்படவுள்ளது.

விமானநிலையத்திலிருந்து அவர் நேரடியாக கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்கே செல்வார் என கூறப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க