உள்நாட்டு செய்திகள்புதியவை

ரிசாட்டுக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள்!

குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக நான்கு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

குறித்த குழு, கடந்த 4ஆம் திகதி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி மாலை 4.00 மணி வரை முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளவுள்ளது.

இதுவரை பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய 3 முறைப்பாடுகள் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க