உள்நாட்டு செய்திகள்புதியவை

பூஜித் ஜெயசுந்தரவின் மனு விசாரணை ஒத்தி வைப்பு

தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்பி அனுப்பியமைக்கு எதிராக காவல்துறைமா அதிபர் தாக்கல் செய்த மனுவின் விசாரணை ஜூன் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இப்புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தி காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை ஜனாதிபதி கட்டாய விடுமுறையில் அனுப்பினார் .

இதற்கு எதிராகவே பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்குதல் செய்துள்ளார்.

கருத்து தெரிவிக்க