மலையகச் செய்திகள்

கிளன்டில் தோட்டத்தில் மீண்டும் கிராமசேவகர் காரியாலயம்

குடா மஸ்கெலியா பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கிராமசேவகர் காரியாலயம் மீண்டும் கிளண்டில் தோட்டப்பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

பிரதேச செயலகத்தினால் இடமாற்றம் செய்யப்பட்ட மேற்படி காரியாலயத்தை மஸ்கெலியா பிரதேச சபை மீண்டும் கிளண்டிலில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கிளண்டில் தோட்ட மக்கள் பயன்பெற்ற குறித்த காரியாலயம் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மக்கள் அசௌகரியங்களுக்கு உட்பட்டு வந்தனர்.

இன்னும் சில வாரங்களில் பழைய இடத்திலேயே கிராமசேவகர் பிரிவு அமைக்கப்படுவதோடு நிரந்தரமான கட்டிடத்துடன் அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க