உள்நாட்டு செய்திகள்

இந்திய பிரதமரை வரவேற்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றதன் பின்னர் பிரதமர் மோடி முதல்முறையாக மாலைதீவு மற்றும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையிலேயே அவர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளார்.

அயல்நாடுகளுடனான நட்புறவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவ்விஜயம் அமையுமென இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க