உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அமைச்சர்களின் பதவிவிலகல் கடிதங்கள் ஜனாதிபதிக்கு கிடைக்கவில்லை

அரசாங்கத்தில் இருந்து விலகிய 9 முஸ்லிம் அமைச்சர்கள், மற்றும் ராஜாங்க, பிரதியமைச்சர்கள்;, தமது பதவிவிலகல் கடிதங்களை இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் அவர்களில் எவரும் இன்னும் உத்தியோகபூர்வ வாகனங்களையும் மீள கையளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னரைப்போலவே தொடர்கின்றன.

இந்தநிலையில் குறித்த அமைச்சர்களின் பதவிவிலகல் தொடர்பான எவ்வித ஆவணங்களும் தமக்கு கிடைக்கவில்லை என்று ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தமது பதவிவிலகல் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்னும் அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க