வடக்கு செய்திகள்

தேசிய மரம் நடுகை திட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு

நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் ஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள விளாவோடை பிரதேசத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, பிரதேச செயலாளர்கள், திணைக்களங்கள்சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க