உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

கிளிநொச்சி சுண்டிகுளம் பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதியில் மூன்று பேர் 120 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின் போது, பாரவூர்தியொன்றை சோதனைக்கு உட்பபடுத்தியுள்ளனர்.

இந்த பாரவூர்தியில் இருந்து கேரள கஞ்சாவுடன் கிளிநொச்சி, பளை மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க