உள்நாட்டு செய்திகள்புதியவை

கொட்டாகொட பகுதியில் பதற்றம் – பாதுகாப்பு அதிகரிப்பு

வெலிகம, கொட்டாகொட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பதற்றம் தற்போது தணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனந்தெரியாத குழுவொன்று குறித்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைய முற்பட்டமையால் பதற்றமான நிலை ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையறிந்த குறித்த பகுதி இளைஞர்கள் அவர்களை சுற்றிவளைக்க முற்பட்ட போது, அந்தக் குழுவினர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதையடுத்து, பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கருத்து தெரிவிக்க